அமெரிக்காவுக்கு ஒபாமா… தமிழ்நாட்டுக்கு நம்ம அம்மா.. என்று பேசி மக்களை மகிழ்வித்த நடிகர் விவேக்கின் நினைவுநாள் இன்று..!

நகைச்சுவை நடிகராக மட்டுமே இருக்காமல் குணச்சித்திர காதாபாத்திரத்திலும் தன்னை ஒரு சிறந்த நடிகராக வெளிப்படுத்தியவர்தான் நடிகர் விவேக். அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் இயற்கை எய்தினார். 2021 ஏப்ரல் 17 தான் அந்ததாள். நான்கு பிலிம் பேர் விருதுகள், நான்கு தமிழக அரசு விருதுகள், பத்மஸ்ரீ என்று பல விருதுகளைப் பெற்றவர். மறைந்த நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் அன்புக் கட்டளைக்கு இணங்க ஒரு லட்சம் மரக்கன்றுகள் முதல் ஒரு கோடி மரக்கன்றுகள் அமைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அதேபோல மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் அன்பிற்கு பாத்திரமானவர். விவேக்கின் மகன் பிரசன்னா மரணம் அடைந்தபோது முதல் ஆளாக சென்று அவருக்கு உறுதுணையாக ஆறுதல் கூறியவர் புரட்சித் தலைவி அவர்கள். இப்படி புரட்சித் தலைவிக்கும் நடிகர் விவேக்கிற்கும் ஒரு நல்ல உறவுநிலை இருந்துள்ளது. இன்று விவேக் இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. அவரது இந்த நினைவுநாளை அவரது இரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவுசெய்து வருகின்றனர்.

Exit mobile version