சபரிமலைக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது – நடிகர் சிவக்குமார்

சென்னையில் தனியார் நிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நடிகர் சிவக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்பை நீதிபதிகள் பல ஆலோசனைகளுக்கு பிறகே வழங்கியதாவும், அதனை கேரள அரசு நடைமுறைபடுத்துவதாகவும் தெரிவித்தார்.

பெண்களை அடக்கி வைத்திருந்த காலம் சென்றுவிட்டது என குறிப்பிட்டார். இப்போது பெண்களை தடுத்தாலும் இன்னும் 4 ஆண்டுகள் கழித்து பெண்கள் நிச்சயம் அங்கு செல்வார்கள், அதனை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

மகர விளக்கு பூஜை நடைபெறும் காலத்தில் ஆண்களே லட்சக்கணக்கில் கலந்து கொள்வதால், கடும் நெரிசல் ஏற்படும் என குறிப்பிட்ட அவர், கூட்டம் குறைவாக உள்ள பிற நாட்களில் பெண்கள் அங்கு செல்ல நிச்சயம் அனுமதிக்கப்பட வேண்டும் என்றார்.

Exit mobile version