நடிகர் சங்கத்திற்காக மூன்றரை வருடங்கள் கடுமையாக உழைத்துள்ளோம்: கார்த்தி

நடிகர் சங்கத்திற்காக கடந்த மூன்றரை ஆண்டுகள் கடுமையாக உழைத்துள்ளதாகவும் அதனால் யாரையும் வாக்கு கேட்டு சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நடிகரும் நடிகர் சங்கத்தின் பொருளாளருமான கார்த்தி தெரிவித்துள்ளார். வரும் 23ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் சேலத்தில் நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டிய அவர், நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டால் இந்த திட்டங்கள் தொடரும் என்றும் கூறினார்.

Exit mobile version