மாரி செல்வராஜுடன் கை கோர்க்கும் நடிகர் தனுஷ்

மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய “பரியேறும் பெருமாள்” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் நடிகர் தனுஷ், பரியேறும் பெருமாள் படம் எதார்த்தமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் தான் நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த புதிய படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க உள்ளதாகவும் தனுஷ் தெரிவித்துள்ளார்.

Exit mobile version