நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவு…எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்..!

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் இன்று அதிகாலை 4.30 மணிக்கு இயற்கை எய்தியுள்ளார். அவருக்கு வயது 84. பக்கவாத நோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உடல் தகனமானது சென்னை பெசண்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற உள்ளது. அஜித்குமாரின் தந்தை மறைவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, தன்னைத்தானே தகவமைத்து கொண்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், அன்புச்சகோதரர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.பி.சுப்ரமணியம் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்,தந்தையை இழந்து வாடும் திரு.அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version