பிரதமருக்கு எச்சரிக்கை விடுத்த பெண் கைது 

சபரிமலை விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை விளக்க கோரி பிரதமர் மோடியை முற்றுகையிடப்போவதாக அறிவித்த பெண் உரிமை போராளி திருப்தி தேசாயை போலீஸார் கைது செய்தனர். 

சபரிமலை விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை கூறாமல் பிரதமர் மோடி மவுனம் காத்து வருகிறார். இதனிடையே அகமது நகர் மாவட்டத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்கு நேற்று சென்ற பிரதமர் மோடியை முற்றுகையிடப்போவதாக பெண் உரிமை போராளியான திருப்தி தேசாய் அறிவித்திருந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் திருப்தி தேசாயை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபாவளிக்கு பிறகு சபரிமலைக்கு தான் செல்ல இருப்பதாக தெரிவித்தார்.

 

Exit mobile version