பேசுவதை நிறுத்திய பெண்ணின் முகத்தின் மீது ஆசிட் வீச்சு

சேலம் குகை பகுதியில் வசித்து வருபவர் காயத்ரி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கும் காயத்ரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காயத்ரி சீனிவாசனுடனான தொடர்பை நிறுத்தியதால், ஆத்திரமடைந்த சீனிவாசன், இன்று காலை காயத்திரி வீட்டை விட்டு வெளியே வரும் போது, மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை காயத்ரி முகத்தில் வீசி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த காயத்திரி சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து செவ்வாய்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற சீனிவாசனை தேடி வருகின்றனர். மேலும் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட குற்றவியல் நீதிபதி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயத்ரியிடம் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

Exit mobile version