மேல்மருவத்தூர் அருகே சாலையோரம் உள்ள மரத்தில் வேன் மோதிய விபத்தில் 25க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயமடைந்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த அண்டியூர் பகுதியை சேர்ந்த 60க்கும் மேற்பட்டவர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிந்து வேனில் வந்துகொண்டிருந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே சென்டிவாக்கம் வந்தவாசி – மேல்மருவத்தூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பெண்கள் உட்பட 25க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Discussion about this post