பட்டாசு ஆலையில் விபத்து; 11 பேர் பலி!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அச்சங்குளம் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் ஆலையில் உள்ள 4 அறைகளும் முற்றிலும் தரைமட்டமானது. விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 15 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களுக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பட்டாசுக்குள் வெடிப்பொருளை செலுத்தும் போது ஏற்பட்ட உராய்வால் வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

 

Exit mobile version