குழந்தைகள் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான அபிராமி

பெற்ற குழந்தைகளை கொலை செய்த குற்ற வழக்கில் ஆஜரான அபிராமிக்காக வாதாட வழக்கறிஞர்கள் வராததால், வழக்கை ஒத்திவைத்தது காஞ்சிபுரம் நடுவர் நீதிமன்றம்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை சேர்ந்த அபிராமி, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக பெற்ற குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை காஞ்சிபுரம் நடுவர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, அபிராமிக்கு ஆதரவாக வாதாட வழக்கறிஞர்கள் வராததால், இந்த வழக்கை ஜனவரி மாதம் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Exit mobile version