அபிநந்தன் என்ற வார்த்தைக்கு புதிய அர்த்தம் கிடைத்துள்ளது- பிரதமர் மோடி

அபிநந்தன் என்ற வார்த்தைக்கு புதிய அர்த்தம் கிடைத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

‘கட்டுமான தொழில்நுட்பம் இந்தியா 2019’ என்ற பெயரில் டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியா எதை செய்தாலும் உலக நாடுகள் உற்று கவனிக்கின்றன என்றும் குறிப்பிட்டார். இந்திய ராணுவப் படை அதிகாரி அபிநந்தன் குறித்து பேசிய மோடி, சமஸ்கிருத வார்த்தையான அபிநந்தன் என்பதற்கு பாராட்டு என்று அர்த்தம் என்றும் தற்போது அபிந்தன் என்ற வார்த்தைக்கு புதிய அர்த்தம் கிடைத்திருப்பதாகவும் பெருமிதத்துடன் கூறிப்பிட்டார்.

Exit mobile version