காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணை கடத்திய இளைஞர்

சென்னை அருகே, பள்ளி மாணவர்கள் உதவியுடன் இளம்பெண்ணை கடத்திய இளைஞரை பிடித்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில்   சாலையோரம் சென்றுகொண்டிருந்த கார், பள்ளத்தில்   சிக்கியது.  காரில் இருந்து ஒரு இளம்பெண் அலறும் சத்தம் கேட்டது.  அந்த வழியே சென்ற பொதுமக்கள்  காருக்குள் இருந்த இளைஞர்களை பிடித்து சரமாரியாக தாக்கி இளம் பெண்ணை மீட்டனர். இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.   சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த இளம்பெண்ணை மீட்டு அந்த மூன்று இளைஞர்களையும் அழைத்து சென்று விசாரணை செய்தனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.  பிடிபட்ட நபர் மதனந்தபுரத்தை சேர்ந்த  கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது.. இவர் அந்த இளம்பெண்ணை  ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.. அந்த இளம்பெண்  காதலுக்கு பச்சைக்கொடி காட்டாத நிலையில், 11 ம்  வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் உதவியுடன்  இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக கடத்தியுள்ளார்.  கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த அந்த மாணவியை   கடத்தி சென்றபோது கார் பள்ளத்தில் சிக்கியதால்  குற்றச்சம்பவம் தடுக்கப்பட்டது. கடத்தப்பட்ட பெண் மத்திய உளவு பிரிவு இன்ஸ்பெக்டரின் மகள் என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.  

Exit mobile version