பந்திப்பூர் வனத்திற்குள் கம்பீரமாக நடந்து சென்ற புலி

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் கம்பீரமாக நடந்து சென்ற புலியை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர்.

பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. குறிப்பாக பந்திப்பூர் வனப்பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகளை காண, சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அந்த வகையில், டிரக்கிங் வாகனத்தில் வனத்திற்குள் சுற்றுலாப் பயணிகள் சென்றுக் கொண்டிருந்த போது, புலி ஒன்று கம்பீரமாக நடந்து சென்றது. இதனைக் கண்டு மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள் தங்களது செல்போனில் அதனை வீடியோ எடுத்தனர். நீண்ட நேரம் ஒரே பாதையில் நடந்து சென்ற அந்த புலி பயணிகளை சீண்டவில்லை.

Exit mobile version