700 புத்தகங்களை கொண்டு கிறிஸ்துமஸ் குடில் அமைத்த அரசு பள்ளி ஆசிரியர்

புதுச்சேரியில் அரசு பள்ளி ஓவிய ஆசிரியர் 700 புத்தகங்களை கொண்டு கிறிஸ்துமஸ் குடில் அமைத்து அசத்தியுள்ளார்.

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஓவிய ஆசிரியரான சுந்தரராசு என்பவர் தனது வீட்டில் வித்தியாசமான முறையில் புத்தகங்களை கொண்டு குடில் அமைத்துள்ளார். இந்து மதத்தை சேர்ந்த இவர், ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான முறையில் குடில் அமைத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதன்படி புத்தகம் வாசிப்பு குறித்து மக்களிடமும், மாணவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தனது வீட்டில் சுமார் 700 புத்தங்களை கொண்டு கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ளார். இந்தக் குடிலில் பாரதியாரின் கவிதைகள், திருக்குறள், பொதுஅறிவு, அரசியல் என பலதரப்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

Exit mobile version