குரங்குகளுக்கு தினமும் உணவளிக்கும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி

மலைகள் சூழ்ந்த மதுரையின் திருப்பரங்குன்றத்தில் வசிக்கும் குரங்குகளுக்கு ஓய்வு பெற்ற பெண் காவல் அதிகாரி ஒருவர் தொடர்ந்து உணவளித்து வருவது காண்பவர்களை கவர்ந்து வருகிறது.

மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மலைகள் சூழ்ந்த பகுதிகள் அதிகளவில் காணப்படுகிறது. இந்த பகுதிகளில் குரங்குகள் அதிகளவில் வசிக்கின்றன. கோயில்களுக்கு வரும் பக்தர்கள் தரும் பொருட்களை இவைகள் உணவாக கொள்கின்றன.

இந்தநிலையில் திருப்பரங்குன்றத்தில் ஓய்வு பெற்ற பெண் காவல் அதிகாரி ஒருவர், இந்த குரங்குகளுக்கு தினமும் உணவளித்து வருகிறார். நாள்தோறும் ஆட்டோவில் அதிகளவிலான வாழைப்பழங்கள் உள்ளிட்டவற்றை கொண்டுவரும் இவர், அவற்றை குரங்குகளுக்கு உணவாக அளிக்கிறார்.

மேலும் பல்வேறு தானியங்களையும் கொண்டுவந்து, அங்குள்ள கிளி, அணில் உள்ளிட்டவற்றிற்கு உணவாக தருகிறார். இவரின் இந்த சேவை அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Exit mobile version