துப்பாக்கியால் நாயை சுட்டுக்கொன்றவர் கைது

சிவகங்கை அருகே துப்பாக்கியால் நாயை சுட்டுக்கொல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சுண்டக்காட்டில் ராமசாமி என்பவர் துப்பாக்கி வைத்துக்கொண்டு பலரையும் மிரட்டி வந்துள்ளார். இந்த நிலையில் இரவில் துப்பாகியுடன் சென்ற ராமசாமி, தெருவில் நின்ற நாயை இரக்கமின்றி சுட்டுக்கொன்றார். இச்சம்பவம் குறித்து சுண்டக்காடு கிராம நிர்வாக அலுவலர் அன்னபூரணி கொடுத்த புகாரின் பெயரில் ராமசாமி கைது செய்யப்பட்டார். அனுமதியின்றி அவர் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை கண்டவராயன்பட்டி காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Exit mobile version