பத்து பேர் கொண்ட கும்பல் உருட்டு கட்டைகளால் சரமரியாக தாக்கிய சம்பவம்

சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வாலிபர் உருட்டுக்கட்டையால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சாந்தோம் தேவாலயத்திற்கு எதிரே உள்ள சமுதாய கூடத்தில் திருமண வரவேற்பு விழா ஒன்று நடைபெற்றது. அதில் நொச்சி நகரை சேர்ந்த விஜய் என்ற வாலிபரும் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் வாலிபர் விஜயை பத்து பேர் கொண்ட கும்பல் உருட்டு கட்டைகளால் சரமரியாக தாக்கியது. உயிருக்கு பயந்து மண்டபத்தை விட்டு வெளியே ஒடிய விஜயை விடாமல் துரத்திய அந்த கும்பல், விஜய் சாகும் வரை தாக்கி கொன்றது. பின்னர் அனைவரும் தப்பி ஓடி விட்டனர்.

சம்பவம் பற்றி தகவலறிந்து வந்த மயிலாப்பூர் போலீசார் விஜயின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை நடந்த இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அதே போல் மோப்ப நாய் சீபா, கொலையாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ள்னர்.

Exit mobile version