பஞ்சாபில் பாகிஸ்தான் உளவாளி ஒருவர் கைது

பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப்பகுதியான பெரோஸ்பூரில் பாகிஸ்தான் உளவாளி ஒருவரை எல்லை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து செல்போன், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப்பகுதியான பெரோஸ்பூரில் பாகிஸ்தான் உளவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ஒரு செல்போன் மற்றும் பாகிஸ்தான் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த செல்போனில் 8 பாகிஸ்தான் இயக்கங்களின் தொலைபேசி எண்கள் மற்றும் தேடப்படும் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 6 பேரின் தொலைபேசி எண்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அவர் உத்தரபிரதேசத்தின் மொராதாபாத்தை சேர்ந்தவர் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் எல்லை பாதுகாப்புப் படையினர் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version