அரிவாளுடன் வீடு புகுந்து அதிமுக பிரமுகரை கொல்ல முயன்ற மர்ம நபர்

சென்னை செம்மஞ்சேரி துலுக்காணத்தம்மன் கோவில் தெருவில் குடும்பத்துடன் வசிப்பவர் முத்து கிருஷ்ணன். இவர் கடந்த உள்ளாட்சி தேர்தலில் செம்மஞ்சேரி பகுதி 200-வது வார்டு கவுண்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் தேர்தெடுக்கப்பட்டவர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முத்து கிருஷ்ணன் தன்னுடைய குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சிக்கு செல்ல தயாராகி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சதீஷ் என்பவர் குடிபோதையில் முத்து கிருஷ்ணணின் கார் கண்ணாடியை உடைத்தார்.

மேலும் முத்துகிருஷ்ணன் வீட்டினுள் அரிவாளுடன் சென்று சத்தம் போட்டிருக்கிறார். சப்தம் கேட்டு வெளியே வந்த முத்து கிருஷ்ணனை அரிவாளால் தாக்க முயற்சிக்கும்போது முத்துகிருஷ்ணன் வீட்டின் அறைக்கு சென்று உட்பக்கம் பூட்டி உள்ளே அமர்ந்திருக்கிறார். வெளியே இருந்த சதீஷ் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனால் பயந்து போன முத்துகிருஷ்ணன் அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு காவல்துறையினரை உடனடியாக அனுப்பும்படியும் கேட்டு கொண்டுள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்க்கு வந்த செம்மஞ்சேரி காவல்துறையினர் முத்து கிருஷ்ணன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அரிவாளுடன் வீட்டிற்குள் நுழைந்த சதீஷை தேடிவருகின்றனர், இது குறித்து முத்துகிருஷ்ணன் கூறுகையில் எந்த ஒரு முன் விரோதமும் இல்லாமல் தன்னை வெட்ட வந்ததாக தெரிவித்துள்ளார். இந்த கொலை முயற்சி சம்பந்தமாக தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version