பயிற்சிக்கு வந்த இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய நபர் கைது

சென்னையில் வேலை தொடர்பான பயிற்சிக்கு வந்த இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம் அருகேயுள்ள சேலையூர் கேம்ப் ரோடு பகுதியில் தனியார் கன்சல்டிங் நிறுவனத்தை நடத்தி வருபவர் கார்த்திக் ராஜா. இந்த நிறுவனத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தரவும், நிறுவனங்களில் பணிபுரியவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அங்கு திருச்சி ஓலையூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் பயிற்சிக்காக சேர்ந்துள்ளார். இதனிடையே அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவரை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். அந்த படத்தை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க ஒரு லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததன் அடிப்படையில் கார்த்திக் ராஜாவை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Exit mobile version