வேலூர் அருகே நூறு ஆண்டுகள் பழமையான மரகத லிங்கம் கண்டெடுப்பு: பொதுமக்கள் வழிபாடு

வேலூர் மாவட்டம் மூங்கப்பட்டு கிராமத்தில், கோயில் கட்டிடத்தை புதுப்பிக்க கருவறையை தோண்டிய போது நூறு ஆண்டுகள் பழமையான மரகத லிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 400 கிலோ எடைக்கொண்ட மரகதலிங்கத்தைக் காண அப்பகுதி மக்கள் கோயிலில் குவிந்தனர். தற்போது தற்காலிக பீடம் அமைத்து மரகத லிங்கத்திற்கு பூஜை செய்து கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version