கணவனின் ராணுவ பணியை தொடர இருக்கும் சாதனை பெண்…

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மேஜர் பிரசாத் மஹாதிக், கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ந் தேதி அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இந்திய-சீன எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது தீ விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் ஒரு வருடம் கழித்து, தனது கணவன் மிகவும் நேசித்த ராணுவ பணியை தொடர, பிரசாத் மஹாதிக்கின் மனைவி கவுரி பிரசாத் மஹாதிக் விரும்பினார்.

ராணுவத்தில் சேர்வதற்காக SSB தேர்வை எழுதிய கவுரி முதலில் தோல்வி அடைந்தார். இருப்பினும் மனம் தளராத கவுரி, மீண்டும் நம்பிக்கையாக தேர்வு எழுதி வெற்றி பெற்றார். தேர்வில் வென்ற அவருக்கு வருகின்ற ஏப்ரல் மாதம் சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி முடிந்த பின், அவர் இந்திய ராணுவத்தில் சேர உள்ளார். கணவன் இறந்த பின்னும், கணவன் நேசித்த பணியை தொடர உள்ள கவுரியை ராணுவ அதிகாரிகளும், தலைவர்களும், பொதுமக்களும் வாழ்த்தி வருகின்றனர்.

Exit mobile version