மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து

மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

மும்பையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தரைத்தளத்தில் கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஏற்பட்ட தீ தரைததளம் முழுவதும் வேகமாக பரவியது. இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

Exit mobile version