மும்பை செம்பூரில் அடுக்கு மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து : 7 பேர் பலி

மும்பை செம்பூரில் அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மும்பை செம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

14 வது மாடியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 4 பெண்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் படுகாயம் அடைந்த 2 பேருக்கு அருகில் உள்ள ராஜவாடி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. விபத்து குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version