வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிறந்த ஆண் புலிக்குட்டி !

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பெண் புலி ஒன்று ஆண் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது.

சென்னையை அடுத்த வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் சத்தியமங்கல காடுகளில் இருந்து மீட்கப்பட்ட உத்ரா என்ற பெண் புலி பராமரிக்கப்பட்டு வருகிறது.

உத்ரா கடந்த 7 வாரங்களுக்கு முன்பு 2 குட்டிளை ஈன்றது. அதில் ஒரு குட்டி இறந்து விட மற்றொரு குட்டியை வன விலங்கு மருத்துவர்கள் பராமரித்து வந்தனர். 

இந்த புலிக்குட்டி தற்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளது. இந்தநிலையில், புலிக் குட்டியின் புகைப்படத்தை உயிரியல் பூங்கா அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். 4 மாதங்களுக்கு பிறகு புலிக்குட்டியை பார்க்க பார்வையாளர்கள் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version