கால்களில் நெருப்போடு ஓடும் சிறுவன்: வடமாநில மக்களை அதிர வைத்த வைரல் வீடியோ

சாலையில் நடந்து சென்ற இளைஞர் ஒருவர் மின்கம்பியை மிதித்ததால் அவர் கால்களில் தீப்பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி மக்களை பதைபதைக்க வைக்கிறது. என்ன ஆனது அந்த இளைஞருக்கு? – இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்…

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நவிமும்பையில் கோபர்கைர்னே என்ற பகுதி உள்ளது. இங்குள்ள சாலை ஒன்றில் சுபம் சோனி என்ற 20 வயது இளைஞர் நடந்து சென்ற போது, அவர் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட மின்சார வயர் ஒன்று வெளியே நீட்டிக் கொண்டிருந்தது தெரியாமல் அதன் மீது கால் வைத்துவிடுகிறார்.

மின்கசிவு உள்ள அந்த வயர் இதனால் குபீரென தீப்பிடிக்கிறது. கால்களின் கீழே வெடி வெடித்தது போல தீப்பிடித்ததால் அந்த இளைஞர் அதிர்ச்சி அடைந்து சாலையில் நெருப்போடு ஓடுகிறார். அங்கு தண்ணீர் பிடித்துக் ஒண்டிருந்த ஒருவர் இதை கவனிக்கிறார்.

இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளன. பின்னர் கால்களில் தீ அணைக்கப்பட்ட சுபம் சோனி, அங்குள்ள மக்களால் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டு, தற்போது தீக்காயங்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சாலையில் செல்லும் இளைஞர் ஒருவரின் கால்களில் திடீரென தீப்பிடிக்கும் இந்த சிசிடிவி காட்சிகள் நேற்று வட மாநில மக்களால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இது தொடர்பான கண்டனங்களைப் பலரும் பதிவு செய்திருந்தனர், இந்நிலையில் இது தொடர்பாக நவிமும்பை பகுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Exit mobile version