10ஆம் வகுப்பு மாணவியின் தற்கொலைக்கு காரணமான இளைஞர் கைது

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே, பத்தாம் வகுப்பு மாணவியின் தற்கொலைக்கு காரணமான இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே தேவம்பாளையத்தை சேர்ந்த நந்தகுமார் என்பவர் அப்பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியுடன் ஆபாசமாக புகைப்படம் எடுத்துள்ளார். இந்தப் புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவதாக அவர் மாணவியை மிரட்டியுள்ளார்.இதனால் அச்சமடைந்த அந்த மாணவி, தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் நந்தகுமாரை போக்சோ சட்டத்தின் மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version