கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி

தருமபுரி அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தின் சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த சீனிவாசன், தனக்கு சொந்தமான புதிய காரில் பெங்களூருவிலிருந்து தருமபுரி வழியாக சேலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதியமான்கோட்டை அருகே புறவடை பகுதியில் முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது சீனுவாசனின் கார் அதிவேகமாக மோதியது. இதில் சீனிவாசன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதியமான்கோட்டை போலீஸார் சீனிவாசன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

செல்போன் பேசியபடி, அதிவேகமாக காரை இயக்கியதே இந்த விபத்துக்கு காரணம் என்கின்றனர் போலீசார். இந்த விபத்து நடந்த இடத்திலிருந்த சி.சி.டி.வி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

Exit mobile version