96 வயதில் 96 பக்க நாவல் – கி.ரா.

புதுச்சேரி இளவேனில் என்றால் பத்திரிகை உலகில் சிறந்த புகைப்படக் கலைஞர் என்பது அனைவரும் அறிந்ததே. அதைவிட கி.ரா.வுக்கு மிகவும் இணக்கமான, அணுக்கத் தொண்டர் என்று புதுவை இளவேனிலை குறிப்பிடலாம்.

கி.ராவை. தாத்தா என்று இளவேனிலும், இளவேனிலை பேரன் என்று கி.ரா.வும் அழைக்கும் அளவுக்கு இருவருக்குள்ளும் அப்படி ஒரு புரிதல் உள்ளது.

தமது 96 பக்க நாவலின் உரிமையை புதுவை இளவேனிலுக்கு வழங்கியுள்ளார் கி.ரா. காலச்சுவடு பதிப்பகம் இந்த நூலை வெளியிட உள்ளது. கி.ரா.வின் அருமையான புகைப்படங்களை எடுதுள்ளார் இளவேனில்.

கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், கரிசல் நாட்டு சொல்லகராதி போன்ற ஆகச்சிறந்த படைப்புகளை தந்த 96 வயது இளைஞரின் புதிய படைப்பை எதிர்நோக்கி இருக்கிறது இலக்கிய உலகம்.

 

Exit mobile version