மீனவர் வீட்டில் 9 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளை

ராமேஸ்வரம் அருகே மீனவர் வீட்டில் இருந்து 9 லட்சம் மதிப்பிலான 30 சவரன் நகை மற்றும் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ராமாநாதபுரம் மாவட்டம், நடராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த இலங்கையா, தனுஷ்கோடியில் தற்காலிகமாக குடிசை அமைத்து, அங்கு தங்கி மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். மீன்பிடித்தொழிலை முடித்தபின், தனது சொந்த கிராமத்தில் உள்ள வீட்டிற்கு திரும்பிய இலங்கையா, தனது அறையில் மர்ம நபர்கள் ஓட்டை போட்டு, நகைகளை திருடிச் சென்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவில் வைத்திருந்த 30 சவரன் நகைகள், செல்போன் மற்றும் மடிக்கணினி மற்றும் 4 ஆயிரம் ரூபாய் ஆகியவை
கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் மீனவ மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தனுஸ்கோடி காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யபட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Exit mobile version