தமிழகத்தில் இதுவரை 820 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தமிழகத்தில் இதுவரை 820 மெட்ரிக் டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி ஒன்றாம் தேதி தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் இதுவரை 820 மெட்ரிக் டன் தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு கோடியே 58 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version