ஈரோட்டில் 8 ஆயிரம் பருத்தி மூட்டைகள் சுமார் ரூ.1 கோடிக்கு ஏலம்

சத்தியமங்கலம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 8 ஆயிரம் மூட்டைகள் ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் பருத்தியை அதிகம் பயிரிட்டு வருகின்றனர். சாக்கு மூட்டைகளில் அடைத்து வைக்கப்பட்ட பருத்தி, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு கொண்டு வரப்பட்டு ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி நடைபெற்ற ஏலத்திற்கு 8 ஆயிரம் பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். ஒரு கிலோ பருத்தி 54 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விலைபோனதாகவும், மொத்தம் 8 ஆயிரம் பருத்தி மூட்டை ஒன்றரை கோடி ரூபாய்க்கு விற்பனையானதாகவும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Exit mobile version