தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகள்

750 படுக்கை வசதிகள், 15 வகையான உயர் ரக சிறப்பு மருத்துவ பிரிவுகள், தினமும் ஆயிரத்து 500 புற நோயாளிகளுக்கு சிகிச்சை என பல்வேறு சிறப்பம்சங்களுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வரும் 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். ஆயிரத்தி 258 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ள இந்த மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகள் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தினமும் ஆயிரத்து 500 புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் எனவும் கண் மருத்துவம், தோல் மருத்துவம், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட 11 வகையான சிறப்பு மருத்துவ பிரிவுகளும் ஏற்படுத்தப்படும்.

இதயநோய், சிறுநீரக நோய், பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட 15 வகையான நோய்களுக்கு உயர்ரக சிறப்பு மருத்துவ பிரிவுகள் அமைக்கப்பட உள்ளன. எம்.பி.பி.எஸ் படிப்பில் 100 இடங்களும் நர்சிங் படிப்பில் 60 இடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் கலையரங்கம், இரவு தங்கும் வசதி, விடுதி போன்றவையும் அமைய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version