கஜா புயல் – 75 லட்சம் மதிப்புள்ள 16 ஆயிரம் கோழிகள் உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஏனாதியில், கஜா புயலால் கோழிப் பண்ணையிலிருந்த 16 ஆயிரம் கோழிகள் உயிரிழந்துள்ளன.

இதனால் சுமார் 75 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பண்ணை உரிமையாளர் செல்லப்பா மாணிக்கம் தெரிவித்துள்ளார். 35 ஆண்டுகளாக கட்டியமைத்த கோழி பண்ணை ஒரே நாளில் சின்னாபின்னமாக மாறியுள்ளது தனது குடும்பத்தினரை வேதனையடைச் செய்துள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version