சென்னை விமான நிலையத்துக்கு 7 அடுக்கு பாதுகாப்பு

இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை இருந்து வருவதால் சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் தொடர்ந்து அத்துமீறி வருகின்றன. இந்திய தரப்பிலும் தக்க பதிலடி அளிக்கப்பட்டு வருகிறது. பதற்றமான சூழ்நிலை காரணமாக முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகள் தீவிர சோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

Exit mobile version