7 பேர் விடுதலை – மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை, ஆளுநர், மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார்.

7 பேரை விடுவிப்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியதைத் தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. சரியாக ஒருவாரம் கழித்து ஆளுநர் இதில் முடிவு எடுத்துள்ளார். 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் பரிந்துரை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அவர் அறிக்கை அனுப்பி உள்ளார். அதில், பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்குமாறு ஆளுநர் கூறியுள்ளார். எனவே இந்த விவகாரத்தில் விரைவில் ஒரு முடிவு தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version