7 பேரின் விடுதலை உடன்பாடில்லை – நாராயணசாமி

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் தொண்டன் என்ற முறையில் ஏழு பேர் விடுதலையில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறினார். அவர்கள் அதிக நாட்கள் சிறையில் இருப்பதால், தமிழக அரசு அதுகுறித்து பரிசீலனை செய்வதில் தவறு இல்லை என்று நாராயணசாமி தெரிவித்தார். வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளே காரணம் என்று குற்றம்சாட்டிய அவர், நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version