மதுரையில் பிரபல ரவுடி கொலை வழக்கில் 6 பேர் கைது

மதுரையில் பிரபல ரவுடி கொலை வழக்கில், ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பழங்காநத்தம் அருகேயுள்ள முத்துப்பட்டியில், கடந்த 25 ஆம் தேதி பிரபல ரவுடி சௌந்திரபாண்டியனை மர்ம நபர்கள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டி அவரது தலையை குப்பையில் வீசி சென்றனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, பிள்ளையார் கணேஷ் என்பவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த பிள்ளையார் கணேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளான ராம்குமார், தமிழ்செல்வன், முகமது இலக்கியா, மனோஜ் மற்றும் உமா மகேஷ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Exit mobile version