சென்னையில் தனியார் தங்க நகை பட்டறையில் 6 கிலோ தங்கம் திருட்டு

சென்னை யானைகவுனியில் தங்க நகை பட்டறையில் 6 கிலோ தங்கம் திருடி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை யானை கவுனி அனுமந்தராயன் கோயில் தெருவில் இயங்கி வரும் சுகாஷ் பட்னாகருக்கு சொந்தமான தங்க நகை தயாரிக்கும் பட்டரையில் 10க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடையில் 6 கிலோ தங்கம் காணாமல் போனதையடுத்து காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இரண்டு நாட்களுக்கு முன் ராகுல் கௌதம் என்ற ராஜஸ்தான் மாநில இளைஞர் பணி அமர்த்தப்பட்டதாகவும், சம்பவத்தன்று கவுண்டரில் நகையை வாங்கிய அவர் நேநீர் இடைவேளை சென்று திரும்ப வரவில்லை எனவும் தெரிய வந்தது. இதனையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு, வடமாநில இளைஞர் ராகுல் கௌதமை சிசிடிவி கேமரா உதவியுடன் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version