6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக,  அங்குள்ள அணைகள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால், காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, அணைகளில் இருந்து  ஒரு லட்சத்து 43 ஆயிரம் கனஅடி  நீர் திறந்து விடப்படுகிறது. கபினி அணையில் 80,000 கனஅடியும், கே.ஆர்.எஸ் அணையில் 63,000 கனஅடியும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.  மேட்டூர் அணையின் நீர் மட்டம் 116.85 அடியாகவும், நீர் இருப்பு 88.53 டிஎம்சியாகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து  30 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சம் கனஅடி வரை அதிகரிக்கும் என்பதால், 6 மாவட்டங்களுக்கு  வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version