அம்பாசமுத்திரத்தில் 6 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவிலான நலத்திட்ட பணிகள்-சட்டமன்ற உறுப்பினர் முருகையா பாண்டியன் தொடங்கி வைத்தார்

நெல்லை மாவட்டம் அம்பையில் 6 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவிலான நலத்திட்ட பணிகளை சட்டமன்ற உறுப்பினர் முருகையா பாண்டியன் தொடங்கி வைத்தார்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. சிவந்திபுரம் ஊராட்சி மன்றத்திற்கு 17 லட்சத்து 40 ஆயிரம் செலவில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பாபநாசம் பொதிகையடியில் 2 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு 2 கோடி ருபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய குடியிருப்பு வழங்கப்பட்டது. அம்பாசமுத்திரம், சின்ன சங்கரன்கோவில் செல்லும் சாலையில் 2 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தார்சாலை அமைத்தல் உள்ளிட்ட நலத்திட்டப் பணிகளையும் சட்டப்பேரவை உறுப்பினர் முருகைய பாண்டியன் தொடங்கி வைத்தார்.

Exit mobile version