போரூரில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 50 சவரன் நகைகள் கொள்ளை

சென்னை போரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போரூர், சபரி நகரில் வசித்து வரும் ராஜகோபால், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சமீபத்தில் இவர் குடும்பத்துடன் கேரளா சென்றுவிட்டு சென்னை திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 50 சவரன் நகை, 25 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Exit mobile version