மயிலை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய 5 பேர் கைது

கோவை அருகே வனப்பகுதியில் மயிலை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய 5 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனத்துறைக்குட்பட்ட தோலாம்பாளையம் வனப்பகுதியில் மர்ம நபர்கள் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் தோலாம்பாளையம் வனப்பகுதியில் மயிலை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய போது, விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் 5 நபர்களை கைது செய்தனர்.

அப்போது தப்பியோடிய 2 மர்மநபர்களை வனத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 5 பேரிடம் இருந்து துப்பாக்கி, 33 தோட்டாக்களை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Exit mobile version