மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினம் – திருவுருவ படத்திற்கு விளக்கேற்றி மரியாதை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின், தினைவு தினத்தையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தங்கள் இல்லங்களில் விளக்கேற்றி மரியாதை செலுத்தினர்.

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு, விளக்கேற்றி மரியாதை செலுத்தினார்.

 

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு விளக்கு ஏற்றி மரியாதை செலுத்தினார்.

 

கோவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது இல்லத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு விளக்கு ஏற்றி மரியாதை செலுத்தினார்.

 

Exit mobile version