சிவகாசியில் 434 மாணவ, மாணவிகள் ஆங்கிலத்தில் எழுதி கின்னஸ் சாதனை முயற்சி

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் 434 மாணவ, மாணவிகள் ஆங்கிலத்தில் எழுதி கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். இந்த முயற்சி கின்னஸ் சாதனையில் இடம் பெற 250 பேர் கலந்து கொள்ள வேண்டும் என்ற நிலையில் 434 பேர் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த படைப்பு அமெரிக்காவில் உள்ள கின்னஸ் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கின்னஸ் வேல்டு ரெக்கார்டு நிறுவனம் இந்த நிகழ்வை ஆராய்ந்து விரைவில் உலக சாதனைப் பட்டியலில் இடம் பெறச் செய்யும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version