ரஷ்யாவில் குத்துச்சண்டை வீரர்கள் பிரமாண்ட பயிற்சியில் 4,000 பேர் பங்குபெற்றனர்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 4 ஆயிரம் குத்துச்சண்டை வீரர்கள் பங்குபெற்ற பிரமாண்ட பயிற்சி நடைபெற்றது.

புதிய உலக சாதனை படைக்கும் முயற்சியாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ரெட் சதுக்கத்தில் நடைபெற்ற பயிற்சியில் 4 ஆயிரத்து 273 பேர் பங்கேற்றனர். இதற்கு முன்பு 2017ல், 3 ஆயிரத்து 47 குத்துச்சண்டை வீரர்கள் ஒரே நிகழ்வில் பங்கேற்று சாதனையை படைத்திருந்தனர். தற்போது அதனை முறியடிக்கும் விதமாக 4 ஆயிரம் பேர் பங்குபெற்ற பிரமாண்ட பயிற்சி நடைபெற்றது.

ஒரே நேரத்தில் ஆண்கள் பெண்கள் பயிற்சியில் ஈடுபட்ட நிகழ்வு காண்போரை வெகுவாக கவர்ந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையை கின்னஸ் புத்தக அதிகாரிகள் கணக்கிட்டனர். ஆனாலும் இந்த சாதனை அதிகாரப்பூர்வமாக ஒரு புதிய உலக சாதனையை படைத்துள்ளதா என்பதை உறுதிப்படுத்தவில்லை.

Exit mobile version