சென்னையில் கடத்தப்பட்ட 4 வயது சிறுமியை 12 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை

சென்னையில் கடத்தப்பட்ட 4 வயது சிறுமியை, 12 மணி நேரத்தில் போலீசார் பத்திரமாக மீட்டனர்.

கொத்தாவால் சாவடியை சேர்ந்தவர்கள் ராஜூ, செல்வி தம்பதியினர். சாலையோரத்தில் வியாபாரம் செய்து வரும் இவர்களுக்கு, விஜயலட்சுமி என்ற மனநலம் பாதிக்கப்பட்ட 4 வயது குழந்தை உள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் சிறுமி காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து உதவி ஆணையர் அனந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அந்தச் சிறுமியை போலீசார் பத்திரமாக மீட்டனர். சிசிடிவி காட்சியை வைத்து, சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து கடத்திய மூதாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

Exit mobile version