தண்டவாளத்தில் அமர்ந்து மது அருத்திய கல்லூரி மாணவர்கள்: 4 பேர் பலி

 

சூலூர் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய கல்லூரி மாணவர்கள் மீது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள இருகூர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த 5 மாணவர்கள், ராவுத்தர் பாலம் அருகே இரவு நேரத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருத்தியதாக தெரிகிறது. அப்போது, அந்த வழியாக ஆலப்புழாவில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயில், மது போதையில் இருந்த கல்லூரி மாணவர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 4 மாணவர்கள் உயிரிழந்தனர். விக்னேஷ் என்ற மாணவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்ட காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version