காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து: 30 பேர் காயம்

காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பள்ளி மாணவ மாணவிகள் படுகாயமடைந்தனர்.

கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், பள்ளிக்கான வாகனம் இல்லாததால் தனியார் வாகனத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் ஏற்றி செல்லப்பட்டுள்ளனர். இந்த வாகனம் கூவத்தூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் பயணம் செய்த 30 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.

இதையடுத்து மாணவர்களை மீட்ட அப்பகுதியினர் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பவுஞ்சூர் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version