தமிழகத்தில் விருதுநகர், நெல்லை மாவட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட முப்பது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, செய்தித்துறை இயக்குநர் வீ.ப. ஜெயசீலன் விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும், செய்தித்துறையின் புதிய இயக்குநராக விழுப்புரம் ஆட்சியர் மோகனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல தமிழகத்தில் முப்பது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  தமிழக மேம்பாட்டு ஆணைய செயலர் கே.பி. கார்த்திகேயன் நெல்லை மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்-செயலர் டி.ரவிச்சந்திரன் மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு மருந்து வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகவும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் தகவல் தொடர்புத்துறை செயலாளராகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கூடுதல் முதன்மைச் செயலர் டி.எஸ்.ஜவஹர் தமிழ்நாடு பாசன வேளான்மை நவீனமயமாக்கல் திட்ட இயக்குநராகவும், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் நீரஜ் மிட்டல் நகர்புற நிந்தி மற்றும் கட்டுமான மேலாண்மைக் கழக நிர்வாக இயக்குநராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இதேபோல முப்பது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version